தலையில் அடிபட்ட நபருக்கு தையல் போட்ட தூய்மைப் பணியாளர் - வெளியான அதிர்ச்சி வீடியோ

Update: 2023-09-30 13:48 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், தலையில் காயம்பட்ட நபருக்கு, தூய்மைப் பணியாளர் ஒருவர் தையல் போடும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. தலையில் காயம்பட்ட நபர் ஒருவர் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவருக்கு மருத்துவர் மற்றும் செவிலியர் சிகிச்சை அளிக்காமல், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர் ஒருவர் தையல் போட்டுள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்