"புகார் அளித்தால் அதிகாரி நடவடிக்கை எடுப்பார்" - தீட்சிதர்கள் குழந்தை திருமண வழக்கு

Update: 2024-04-18 04:25 GMT

"புகார் அளித்தால் அதிகாரி நடவடிக்கை எடுப்பார்" - தீட்சிதர்கள் குழந்தை திருமண வழக்கு

#chidhambaram #childmarriage #thanthitv

சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு திருமணங்கள் செய்து வைப்பதால், அந்த குழந்தை திருமணங்களை தடுக்க, நிரந்தர கண்காணிப்பு குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் எஸ்.சரண்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே மாவட்ட சமூக நல அதிகாரி உள்ள நிலையில், இன்னொரு குழு எதற்கு எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குழந்தை திருமணங்கள் குறித்து உடனுக்குடன் மாவட்ட சமூக நல அதிகாரியிடம் புகார் அளித்தால் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கில் தீட்சிதர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தனர்....

Tags:    

மேலும் செய்திகள்