"குடிக்க தண்ணீர் இல்லை... நடக்க ரோடு இல்லை"40 ஆண்டுகளாக தொடரும் அவலம்... புலம்பும் கிராம மக்கள்

Update: 2023-09-10 14:41 GMT

மேல ராதாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட காவாலக்குடி கிராமத்தில் 55-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த, மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர் உள்ளிட்டைவைகள் இல்லாமல் அப்பகுதி மக்கள், கடந்த 20 ஆண்டுகளாக அவதியடைந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறும் கிராம மக்கள், குடிநீரில் மணல் கலந்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்