நண்பருடன் காதல்... கர்ப்பமான 17 வயது சிறுமி - ரத்தப்போக்கு.. ரகசிய கருக்கலைப்பு

Update: 2024-04-07 10:10 GMT

கூடலூரைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியும், அதே வயதைச் சேர்ந்த பள்ளி மாணவனும் காதலித்து ந்த நிலையில், நெருக்கமாக பழகியுள்ளனர். இதில், பள்ளி மாணவி கர்ப்பமானது அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, கூடலூரில் உள்ள தனியார் கிளினிக் நடத்தி வரும் மருத்துவர் நரேந்திர பாபு என்பவர், சிறுமிக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துள்ளார். அதில் ரத்தப்போக்கு அதிகமாகவே, சிறுமி பலவீனமடைந்த நிலையில், கேரளாவில் உள்ள வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது, மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், சட்டவிரோதமாக மருந்து வழங்கிய மருந்தகத்திற்கு சீல் வைத்தனர். மேலும், கருக்கலைப்பு செய்த மருத்துவர் நரேந்திர பாபுவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்