சொந்த ஊர்களுக்கு செல்வோர் கவனத்திற்கு... அரசு வெளியிட்ட அறிவிப்பு

Update: 2024-04-17 08:15 GMT

சொந்த ஊர்களுக்கு செல்வோர் கவனத்திற்கு... அரசு வெளியிட்ட அறிவிப்பு

தேர்தலையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக, இன்றும் நாளையும் பத்தாயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 2,970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 7,154 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற ஊர்களிலிருந்து 3,060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதே போன்று, தேர்தல் முடிந்த பின்னர், 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 6009 பேருந்துகளும், பிற முக்கிய ஊர்களிலக் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,295 பேருந்துகளும் என 8,304 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்