அக்கா தம்பி உயிரை பறித்த `தண்ணீர்'... வெளியான நெஞ்சை நிறுத்தும் காட்சிகள்

Update: 2024-04-24 13:32 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை அருகே அக்காவிற்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக குட்டையில் இறங்கிய அக்காவும், தம்பியும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஜம்பை கிராமத்தில் வசிக்கும் ஏழுமலை என்பவரின் மகள் சுப்புலட்சுமி தனது தம்பி கார்த்திக்குடன் அருகில் உள்ள குட்டைக்கு குளிக்கச் சென்றனர். அப்போது, சுப்புலட்சுமிக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக குட்டையில் இறங்கிய இருவரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவம் குறித்து மணலூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்