பைக்கில் மோதிய கல்லூரி பேருந்து...கையை பறிகொடுத்த தந்தை - தலை நசுங்கி துடிதுடிக்க இறந்த மகன்...

Update: 2024-04-18 04:58 GMT

பைக்கில் மோதிய கல்லூரி பேருந்து...கையை பறிகொடுத்த தந்தை - தலை நசுங்கி துடிதுடிக்க இறந்த மகன்... நாமக்கல்லை உலுக்கிய கோர சம்பவம்

#namakkal #bike #collegebus #thanthitv

திருச்செங்கோட்டை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், தனது 6 வயது மகனை, இருசக்கர வாகனத்தின் முன்பக்கம் அமர வைத்தவாறு ஓட்டிச் சென்றுள்ளார். தோக்கவாடி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், 6 வயது சிறுவனின் தலையில், சக்கரம் ஏறி இறங்கியதால், சிறுவன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், சிறுவனின் தந்தை சதீஷ்குமாரின் வலது கை துண்டானது. தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், படுகாயமடைந்த சதீஷ்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டோ ஓட்டுநரான சதீஷ்குமாருக்கு, உயிரிழந்த 6 வயது மகன், ஒரே குழந்தை என கூறப்படுகிறது. பள்ளி விடுமுறை என்பதால், மகனை கடைக்கு அழைத்துச் சென்றபோது இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்