குடும்பத்துடன் கலெக்டர் ஆஃபிஸிற்குள் புகுந்து பரபரப்பாக்கிய விவசாயி

Update: 2024-02-17 07:24 GMT

ஓசூர் அருகே விவசாய நிலத்திற்கு செல்லும் மின் கம்பங்களை சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியரகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின் போது, மின்கம்பங்களை சேதப்படுத்திய பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி, விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்தார். தக்க நேரத்தில் அவர்களை மீட்ட அதிகாரிகள் குடும்பத்தினருடன் விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்