நேருக்கு நேர்.. மின்னல் வேகத்தில் மோதிய பைக்குகள்.. - நடுரோட்டில் சிதறிய உடல்கள்..

Update: 2023-08-01 17:08 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 2 பேர் உயிரிழந்தனர். பெருங்கோட்டூர் கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன், தனது இரு சக்கர வாகனத்தில் உறவுக்கார பெண்ணுடன் சங்கரன்கோவில் சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அவரது இரு சக்கர வாகனம், எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில், ஜெகநாதன், அமுதராணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கருப்பசாமி என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்