திரைப்பட தொழிலாளர்கள் சம்பள உயர்வு விவகாரத்தில் குழப்பம்

திரைப்பட தொழிலாளர்களுக்கு இன்னும் சம்பள உயர்வு முடிவு செய்யப்படவில்லை என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Update: 2022-01-10 04:33 GMT
திரைப்பட தொழிலாளர்கள் சம்பள உயர்வு விவகாரத்தில் குழப்பம் 

திரைப்பட தொழிலாளர்களுக்கு இன்னும் சம்பள உயர்வு முடிவு செய்யப்படவில்லை என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ராமசாமி வெளியிட்ட அறிக்கையில், திரைப்பட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை முடியவில்லை என்றும் அதற்குள் சம்பள உயர்வு குறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அவசரகதியில் தன்னிச்சையாக அறிவிக்க காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த அறிவிப்பால், தயாரிப்பாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும்,சம்பள உயர்வு ஒப்பந்தத்தில் தயாரிப்பாளர் சங்கமும், பெப்சியும் கையெழுத்து போட்ட பின்பு தயாரிப்பாளர்களுக்கு தெரியப்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.அதுவரையில் நடைமுறையில் உள்ள சம்பளத்தையே தயாரிப்பாளர்கள்  வழங்க வேண்டும் என்றும்,கொரோனா, ஓமிக்ரான் பிடியில் சிக்காமல் இருக்க முகக்கவசத்தை படப்பிடிப்பு குழுவினருக்கு தவறாமல் வழங்க வேண்டும் என்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றி படப்பிடிப்பு, பாடல் மற்றும் வசன பதிவு உள்ளிட்ட பணிகளை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.   
Tags:    

மேலும் செய்திகள்