காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள் - நோய் தொற்று பரவும் அபாயம்

ஓசூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில், அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குவிவதால், நோய் தொற்று பரவும் அபாயம்

Update: 2021-12-07 15:02 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில், அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குவிவதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓசூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில், நிலங்களை பத்திரப்பதிவு செய்ய கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வருகை தருகின்றனர். சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக் கவசம் அணியாமலும் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால், கொரோனா, ஒமிக்ரான் போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

Tags:    

மேலும் செய்திகள்