நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் உதவி - கடன் உதவி வழங்கிய அமைச்சர் நாசர்

சென்னை, ஆவடி பகுதியில் நடைபாதை வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலமாக அமைச்சர் நாசர் ரூபாய் 10 லட்சம் கடன் உதவி வழங்கினார்.

Update: 2021-11-23 09:08 GMT
ஆவடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வங்கிகள் மூலம் நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் நாசர், 100 வியாபாரிகளுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் வீதம் மொத்தம் 10 லட்சம் ரூபாய் கடன் உதவியும் அவர்களுக்கு அடையாள அட்டையையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர், வியாபாரிகளுக்கு தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்த உதவி வழங்கப்பட்டதாகவும் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்