இரும்பு தகரத்தில் மின் கசிவு - மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் பலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை பகுதியில் உள்ள உணவகத்தில் இரும்பு தகரத்தால் அமைக்கப்பட்டிருந்த சுவரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சக்தி என்ற 13 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக அந்த தகரத்தை தொட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உணவக உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.