திருமணமான பெண்ணின் கணவரிடம் காட்டிக்கொடுத்த நண்பன் கொலை - 6 பேர் கைது

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் திருமணமான பெண்ணுடன் உறவில் இருந்ததை, அப்பெண்ணின் கணவரிடம் காட்டிக் கொடுத்த நண்பனை கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2021-10-19 05:40 GMT
பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியில் கடந்த 13 ஆம் தேதி முஹம்மது ஹமீம் என்ற இளைஞர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக ஹமீமின் தந்தை அளித்த புகாரில் ஹமீமின் நண்பர்களான ரபீக் ராஜா மற்றும் ஆசிக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஹமீமின் நண்பரான ரபீக் ராஜா, திருமணமான ஒரு பெண்ணுடன் உறவில் இருந்ததை அப்பெண்ணின் கணவரிடம் ஹமீம் தெரிவித்துள்ளதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த ரபீக் ராஜா, தனது மற்றொரு நண்பரான ஆசிக் உடன் சேர்ந்து ஹமீமை கொலை செய்து கிணற்றில் வீசி சென்றதாகவும் வாக்குமூலம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, கொலைக்கு  உடந்தையாக இருந்ததாக மேலும் 4 பேரை போலீசார் கைது செய்த போலீசார் அவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்