இரு தரப்பினர் இடையே மோதல் - 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள வேட்டமங்கலத்தில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2021-10-17 14:02 GMT
பாப்பாக்குடி கிராமம் வழியாக வேட்டமங்கலம் சென்ற சசிரேகா, முகேஷ்குமார், லோகசுந்தரம் ஆகியோரை வழிமறித்து வேறு சமூகத்தினர் தகாத வார்த்தைகளால் பேசியதுடன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் 2 பேர் காயமடைந்துள்ளனர். இத்தகவல் பரவவே, வேட்டமங்கலம் பகுதியில் இருந்து பாப்பாக்குடியில் தகராறு செய்தவர்களை தாக்கச் சென்றதாகவும், பணியில் இருந்த போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், சசிரேகா புகார் அளித்ததைத் தொடர்ந்து, 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இரு தரப்பையும் சேர்ந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இரு தரப்பினரும் வெவ்வேறு சமூக என்பதால், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்