"மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்" - பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2021-10-17 02:49 GMT
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகையை சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றும், மீனவர்கள் கைது மற்றும் படகுகள் பறிமுதல் போன்ற நடவடிக்கை கவலைக்குரியதாக உள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவோமோ என்ற அச்சத்திலேயே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்