இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர் தாக்குதல் /தடுத்த நிறுத்த வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம்
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்களின் தொடர் தாக்குதலை தடுத்து நிறுத்த கோரி வேதாரண்யம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்களின் தொடர் தாக்குதலை தடுத்து நிறுத்த கோரி வேதாரண்யம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 24 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலை தடுத்து நிறுத்தாவிட்டால், இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.