பேருந்துக்காக காத்திருந்தவருக்கு கத்திகுத்து - பணம்பறிக்க முயன்ற மர்மநபர்கள் தப்பி ஓட்டம்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், பணம் பறிப்பதற்காக உணவக தொழிலாளியை கத்தியால் குத்திய மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-09-24 04:20 GMT
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் காத்திருந்த முத்து கணேசன் என்பவரைநோட்டமிட்ட 2 பேர் அவரை கத்தியால் குத்தி பணம் பறிக்க முயன்று உள்ளனர். முத்துகணேஷ் தான் வைத்திருந்த செல்போன் மற்றும் உடைகளை விட்டு விட்டு உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்து உள்ளார். அருகில் இருந்த பொதுமக்கள் கூச்சல் போட்டதால், கொள்ளையர்கள் இருவரும் தப்பி ஓடியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்