தனி கல்வி வாரியம் அமைப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - புதுச்சேரி அரசுக்கு உத்தரவு
தனி கல்வி வாரியம் அமைப்பது தொடர்பாக புதுச்சேரி அரசு முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
தனி கல்வி வாரியம் அமைப்பது தொடர்பாக புதுச்சேரி அரசு முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு தனி பாடத்திட்டத்தை வகுக்க கோரி ஸ்ரீதர் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு, புதுச்சேரியில் பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, தனி கல்வி வாரியம் அமைத்தால் மாணவர்களின் நலன் சிறப்பாக இருக்கும் என தெரிவித்தது. எனினும், இந்த விஷயம் தொடர்பாக புதுச்சேரி அரசு அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், 4 வாரத்திற்குள் புதுச்சேரி கல்வித்துறை செயலாளருக்கு கோரிக்கை மனு வழங்க மனுதாரருக்கு உத்தரவிட்டனர். மேலும்,
தனிப்பட்ட பாட திட்டம் வழங்குவதின் தேவையை பரிசீலித்து தகுந்த முடிவை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.