"காவலர்களின் தேவையை அறிய ஏற்பாடு" - சட்டபேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

விரைவில் காவலர்களுக்கான ஆணையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-13 09:30 GMT
சட்டபேரவையில் காவல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர்  ஸ்டாலின், காவலர்களின் கவலையைப் போக்கவும் ,காவல் துறையை நவீனப்படுத்தவும் கடந்த 1969,1989 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் காவல் ஆணையம் அமைக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.  திமுக ஆட்சியின் போது காவல்துறையில் கணினி பிரிவு தொடங்கப்பட்டதாகவும், சிறந்த காவலர்களுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், 
காவலர்களின் தேவையை  அறிய விரைவில் காவல் ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்