காவல் மாநகர எல்லைகள் மறு சீரமைப்பு

தமிழகம் முழுவதும் 6 மாநகரங்களில் நிர்வாக வசதிக்காக காவல்துறை உயர் அதிகாரிகளின் பதவி மற்றும் எல்லைகளை மறுசீரமைக்க, தமிழக உள்துறை செயலாளர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-09-08 14:02 GMT
தமிழகம் முழுவதும் 6  மாநகரங்களில் நிர்வாக வசதிக்காக காவல்துறை உயர் அதிகாரிகளின் பதவி மற்றும் எல்லைகளை மறுசீரமைக்க, தமிழக உள்துறை செயலாளர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட உத்தரவில், இதுவரை மேலே கூறிய 6 மாநகரங்களில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் குற்றப்பிரிவு துணை ஆணையர் இருந்து வரும் இரண்டு பதவிகளை மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. புவியியல் அடிப்படையில்  காவல் மாவட்டத்தை தெற்கு, வடக்கு என பிரித்து  தெற்கு பகுதிக்கு ஒரு துணை ஆணையர், வடக்கு பகுதிக்கு ஒரு துணை ஆணையர் என மாற்றி தமிழக உள்துறை செயலாளர் பிரபாகரன் உத்தரவு உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சட்ட ஒழுங்கு தனியாகவும் குற்றப்பிரிவு தனியாகவும் கவனித்து வந்த துணை ஆணையர்கள் இந்த உத்தரவிற்கு பிறகு தங்கள் காவல் மாவட்டத்தில் உள்ள தெற்கு பகுதியில் நடைபெறும் அனைத்து சட்ட ஒழுங்கு குற்ற சம்பவங்களையும் தெற்கு துணை ஆணையரே கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்வார்.


Tags:    

மேலும் செய்திகள்