ஆந்திர மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட படகு: 2 மாத பேச்சுவார்த்தைக்கு பின்பு மீட்பு

ஆந்திர மீனவர்களால் சிறைப்பிடித்து வைக்கப்பட்ட இழுவை விசைப்படகை 2 மாத போராட்டத்திற்கு பிறகு தரங்கம்பாடி மீனவர்கள் மீட்டு வந்தனர்.

Update: 2021-09-08 03:41 GMT
தரங்கம்பாடி மீனவ கிராம பஞ்சாயத்தார் நெல்லூர் சென்று மாவட்ட ஆட்சியர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். சீனிவாசபுரம் பகுதி மீனவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, படகு திரும்ப ஒப்படைக்கப்பட்டது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திசைமாறி சென்ற தரங்கம்பாடி பகுதி மீனவர்கள் படகை ஆந்திர மீனவர்கள் சிறைப்பிடித்து வைத்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்