பெண்களைப் போல எங்களையும் மதித்த முதல்வர் - மூன்றாம் பாலினத்தவர் நெகிழ்ச்சி

தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண நடைமுறை இன்று முதல்அமலுக்கு வந்துள்ளது.

Update: 2021-06-23 09:23 GMT
தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண நடைமுறை இன்று முதல்அமலுக்கு வந்துள்ளது. 
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற அன்று பெண்கள் நகரப் பேருந்தில் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம் என்ற தேர்தல் வாக்குறுதி அமலுக்கு வந்தது.  இதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் இலவசமாக  பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் மாற்றுத் திறனாளிகள், அவருக்கான உதவியாளர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் பயணம் செய்யும் வகையில் இலவச பயணம் நடைமுறைக்கு வந்துள்ளது. இது தங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாக திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்