நிலக்கடலை விதைப்பு பணிகள் துவக்கம் - விறு விறுப்பாக நடைபெறும் வேளாண் பணிகள்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது,.

Update: 2021-05-31 01:53 GMT
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது,. இதனால் தற்போது நிலக்கடலை விதைப்புக்கு ஏற்ற பருவம் என்பதாலும், அதற்கான சீதோஷ்ண நிலை நிலவி வருவதாலும் விவசாயிகள் விதைப்பு பணிகளை தொடங்கி உள்ளனர். மல்லிகை மலர் சாகுபடியில் ஈடுபட்டு இருந்த விவசாயிகள் ஊரடங்கு காரணமாக அதனை விற்க முடியாத சூழல் ஏற்பட்டதால், பூந்தோட்டங்களை அழித்து தற்போது நிலக்கடலை சாகுபடியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்