மாயமான நாகை மீனவர்களை மீட்க வேண்டும் - தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

மாயமான நாகை மீனவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-05-17 10:35 GMT
மாயமான நாகை மீனவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க  வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் 10 பேர் மாயமானது அவர்களின் குடும்பத்தினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே அவர்களின் துயரத்தை போக்கும் வகையில் மத்திய அரசிடம் பேசி விமானப்படை மற்றும் கடற்படை உதவியின் மூலம் மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்