அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா - தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைப்பு

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Update: 2021-05-03 10:20 GMT
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சட்ட மன்ற பொதுத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து, அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சட்டத்துறை செயலாளருக்கு அனுப்பி வைத்தார். புதிய அரசு பொறுப்பேற்றதும், புதிய தலைமை வழக்கறிஞர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Tags:    

மேலும் செய்திகள்