"அரசு குடியிருப்பை காலி செய்ய இயலாது" - 2 மாதம் அவகாசம் கேட்கும் சூரப்பா

அரசு குடியிருப்பில் இருந்து உடனடியாக காலி செய்ய இயலாது என அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-15 10:54 GMT
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகித்த சூரப்பா, கடந்த 11 ஆம் தேதியோடு ஓய்வு பெற்றார். இதையடுத்து பல்கலைக்கழக வளாக துணைவேந்தருக்கான குடியிருப்பில் இருந்து அவர் காலி செய்ய வேண்டும் என உயர்கல்வித் துறை அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் தன்னால் உடனடியாக காலி செய்ய இயலாது என்றும், மனைவிக்கு மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டிருப்பதால் 2 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளரிடம் சூரப்பா கடிதம் அளித்துள்ளார். இதற்காக அரசு விதிக்கக் கூடிய வாடகை தொகையை தருவதாகவும் சூரப்பா தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்