பிரச்சாரத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்ட கமல்
அரசியலுக்கு தாமதமாக வந்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு தாமதமாக வந்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், மதுரவாயல் தொகுதி வேட்பாளர் பத்மபிரியா, பூந்தமல்லி வேட்பாளர் ரேவதி ஆகியோருக்கு வளசரவாக்கத்தில் திறந்த வேனில் நின்றவாறு பிரசாரம் செய்தார். மதுரவாயல் தொகுதியில் நிற்கும் வேட்பாளர் அதிகம் படித்தவர், குறைந்த வயதுடையவர், மக்களின் சேவையில் அதிக நாட்கள் இருக்க முடியும் என குறிப்பிட்டார். புரட்சி என்றால் ரத்தம் சிந்தி, வெடிகுண்டு வெடிக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல என்று கூறிய கமல்ஹாசன், வீரத்தின் உச்ச கட்டம் அகிம்சை என்றார்.