ஒசூர் கொள்ளை கும்பலை, ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீசார்

ஒசூரில் நேற்று காலை தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை ஹைதராபாத் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-01-23 08:36 GMT
ஒசூரில் நேற்று காலை தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை ஹைதராபாத் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஒசூரில் உள்ள நிதி நிறுவனத்தில் நேற்று காலை முகமூடி அணிந்தபடி வந்த கும்பல், ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி 25 கிலோ மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையும் நடந்து வந்தது. இந்த நிலையில் கொள்ளை கும்பலை ஹைதராபாத் அருகே உள்ள சம்சாத்பூர் என்ற இடத்தில் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கொள்ளை கும்பல் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதியான நிலையில் அவர்களிடம் இருந்து 11 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், துப்பாக்கிகள், கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 7 பேரையும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினால் பல உண்மைகள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்