பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்க கோரி வழக்கு - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-01-05 03:14 GMT
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு
புதுச்சேரியில் மட்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், தமிழகத்தில் இந்த சின்னம் ஒதுக்கப்படவில்லை எனக் கூறி, கட்சியின் பொதுச்செயலாளரான ஏ.ஜி.மவுரியா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நக்கீரன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு விளக்கமளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 2-க்கு தள்ளி வைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்