சட்டப்படிப்புக்கான அரியர் தேர்வுகளை நடத்தக்கோரி வழக்கு: பருவத்தேர்வுகளுடன் சேர்த்து நடத்தப்படும் - அரசு தரப்பு

சட்டப் படிப்புகளுக்கான அரியர் தேர்வுகள் பருவத் தேர்வுகளுடன் சேர்த்து நடத்தப்படும் என அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Update: 2020-12-19 03:53 GMT
சட்டப்படிப்புகளுக்கான அரியர் தேர்வுகளை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ஜனவரி 6ஆம் தேதி முதல் நடைபெறும் பருவத்தேர்வுகளோடு சேர்த்து அரியர் தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது. அரியர் மாணவர்களின் நலன் கருதி, அவர்களின் தேர்வு முடிவுகளை மட்டும் விரைந்து வெளியிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அட்டவணைப்படி தேர்வுகளை நடத்தவும், தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியதுடன், வழக்கை முடித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்