"கொரோனா நோயாளிகளின் வீட்டுக்கதவில், போஸ்டர் ஒட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவிடவில்லை"

கொரோனா நோயாளிகள் குடியிருக்கும் வீட்டுக் கதவில் அவர்கள் குறித்த விவரங்களுடன் போஸ்டர் ஒட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவிடவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2020-12-01 12:11 GMT
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீதான விசாரணையின் போது மத்திய அரசு இவ்வாறு தெரிவித்தது. மேலும், பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் இது போன்ற போஸ்டர் ஒட்டப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும், இது தொடர்பான உத்தரவுகளை மாநில அரசுகள் பிறப்பிக்க முடியும் என்றும் மத்திய அரசு தெளிவுப்படுத்தியது. தடுப்பு நடவடிக்கைக்காக அரசுகள் இத்தகைய எச்சரிக்கை நோட்டீஸ்களை ஒட்டினாலும் பாதிக்கப்பட்டவர்களை அக்கம்பக்கத்தினர் தீண்டாமை போக்கில் நடத்த தொடங்கி விடுவார்கள் என தெரிவித்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை நாளை மறுதினத்துக்கு தள்ளி வைத்தது.
Tags:    

மேலும் செய்திகள்