"பேரறிவாளன் விடுதலையில் நியாயமும், தர்மமும் இருக்கிறது" - இயக்குநர் பார்த்திபன்
பேரறிவாளன் விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால் அது உடனடியாக நிகழ வேண்டும் என இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால் அது உடனடியாக நிகழ வேண்டும் என இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். அற்புதம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காத குறையாக போராடி வருவதாகவும், கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும், துயரமும் அளவிட முடியாதது என்றும் பார்த்திபன் கூறியுள்ளார்.