மோசடிகளுக்கு மத்திய அரசு துணை போகிறதா? - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

தேர்தலை விலைபேச நினைக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மோசடிகளுக்கு, மத்திய அரசு, துணை போகிறதா? என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2020-11-08 13:28 GMT
கொரோனா காலத்திலும் ஊழலையே அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், குறிக்கோளாகக் கொண்டுள்ளதாக தமது அறிக்கையில் கூறியுள்ளார்.சக அமைச்சர் மரணமடையும் தருணத்திலும், அதைப் பற்றிச் சிறிதும் கவலைகொள்ளவில்லாமல்,பதுக்கிய பணத்தை மீட்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள் என்பதைப், பத்திரிகைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி  வருவதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.கொள்ளைப் பணத்தைப் பதுக்கிவைத்துத் தேர்தலை விலைபேச நினைக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மோசடிகளுக்கு மத்திய அரசு துணை போகிறதா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.ஊழலில் திளைக்கும் அ.தி.மு.க.வின் பகல்கனவு 
2021 தேர்தலில் சிதைந்து சிதறிவிடும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்