நீலகிரி மாவட்டத்தில் ரூ.131 கோடியில் புதிய பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வீரவாள் மற்றும் வேல் பரிசாக வழங்கி அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Update: 2020-11-06 11:03 GMT
உதகை விருந்தினர் மாளிகை அருகே உள்ள நிகழ்ச்சி மேடைக்கு வந்த முதலமைச்சர், அங்கிருந்த ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் நீலகிரி மாவட்ட அதிமுகவினர் முதல்வருக்கு வீரவாள் மற்றும் வேல் வழங்கினர். தொடர்ந்து, முடிவுற்ற 189 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு திட்டப் பணிகளை பொது பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும், 131 கோடி மதிப்பீட்டிலான புதிய பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.4 ஆயிரத்து 198 பயனாளிகளுக்கு 199 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்