ஆளுநர் பன்வாரிலால் உடன் முதலமைச்சர் சந்திப்பு - மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக நன்றி தெரிவித்தார்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக ஆளுநருக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக ஆளுநருக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார். தமிழக அரசின் 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்த நிலையில், மாலை 5.30 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேசினார். முதலமைச்சருடன் தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் ஆளுநரை சந்தித்தனர்.