ரயில்வேயில் 50 கிராம் பொங்கல் ரூ.80க்கு விற்பனை : "உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்"- திருச்சி சிவா.எம்.பி

ரயில்வேயில் 50 கிராம் பொங்கல், 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-10-05 03:39 GMT
ரயில்வேயில், 50 கிராம் பொங்கல், 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது  குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தி உள்ளார். கோயில் பிரசாதம் அளவுக்கும் குறைவான 50 கிராம் எடையுள்ள பொங்கல், 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ரயில்வே-யில் நடக்கும் இந்த வியாபாரத்தால், பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அதிர்வலையை ஏற்படுத்தும் இந்த காட்சி குறித்து பேசியுள்ள எம்.பி. திருச்சி சிவா, பல்லவன் விரைவு ரயிலில் விற்பனை நடைபெறுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். பொங்கல் உணவுக்கு 8 மாதம் காலாவதி தேதி குறிபிட்டிருந்தது குறித்தும் அந்தக் காட்சியில் வாக்குவாதம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்