தமிழகத்தில் மேலும் 5,783 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

Update: 2020-09-06 16:32 GMT
தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரத்து 480 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 820 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 836 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, 51 ஆயிரத்து 458 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்