ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து வரும் 28ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-08-26 10:51 GMT
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து வரும் 28ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் வட்டங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கேயம், தாராபுரம் வட்டங்களில் உள்ள 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்