கொரோனா நோய் தொற்று உறுதியானதால் அதிர்ச்சி- மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 52 வயது பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 52 வயது பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் மின்விசிறியில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற மாநகராட்சி ஊழியர்கள் கொரோனா உடை அணிந்து வந்து மூதாட்டியின் உடலை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.