"உணவகம் திறந்தும் கூட்டம் இல்லை" - ஓட்டல் உரிமையாளர்கள் வேதனை

புதுக்கோட்டையில் உணவகங்கள் திறந்தும் கூட்டம் இல்லாததால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Update: 2020-08-01 07:32 GMT
புதுக்கோட்டையில், உணவகங்கள் திறந்தும் கூட்டம் இல்லாததால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக 50 சதவீத உணவகங்கள் மூடப்பட்டிருப்பதாக கூறும் உரிமையாளர்கள், போக்குவரத்து அனுமதிக்கப்படாததால், உணவகங்களுக்கு மக்கள் வரவில்லை என்றனர். இதனிடையே, நாளை முழு ஊரடங்கு என்பதால், காய்கறி சந்தையில் மக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. சமூக இடைவெளியின்றி மக்கள், தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்