இன்று முதல் கடைகளில் தேநீர் அருந்த அனுமதி - முழுமையாக இயங்க தொடங்கிய தேநீர் கடைகள்

இன்று முதல் கடைகளிலேயே தேநீர் அருந்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Update: 2020-08-01 07:27 GMT
இன்று முதல் கடைகளிலேயே தேநீர் அருந்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதைதொடர்ந்து மாநகரின் பெரும்பாலான இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேநீர் கடைகள் முழுமையாக இயங்க தொடங்கின. தமிழக அரசின் உத்தரவின்படி, கடைகளின் இருக்கைகளை பொருத்து 50 சதவீதம் வரை வாடிக்கையாளர்கள் அமர்ந்து தேநீர் பருக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேநீர், உணவகம் உள்பட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்