பனைத்தொழிலாளி மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக புகார் - மனுதாரரை நேரில் வரவழைத்து எஸ்.பி. விசாரணை

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக பனைத்தொழிலாளி ஒருவர் புகார் அளித்த நிலையில் எஸ்.பி.அவரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார்.

Update: 2020-07-31 03:44 GMT
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக பனைத்தொழிலாளி ஒருவர் புகார் அளித்த நிலையில் எஸ்.பி.அவரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார். ஆசீர்வாதம் மீரான்குளத்தை சேர்ந்த யாக்கோபுராஜ் என்பவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஆகியோர் தன் மீது போட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார். இதையடுத்து யாக்கோபுராஜை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார். 
இந்த சம்பவத்தில் பொய்யான வழக்கு பதிவு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்.பி. உறுதியளித்ததாக கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்