மூதாட்டிக்கு முகக்கவசம் அணிவித்து அறிவுரை - போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பாராட்டு
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தபோது மூதாட்டி ஒருவருக்கு அன்போடு முகக்கவசம் அணிவித்தக் காட்சி பலரையும் நெகிழ வைத்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தபோது மூதாட்டி ஒருவருக்கு அன்போடு முகக் கவசம் அணிவித்தக் காட்சி பலரையும் நெகிழ வைத்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக புதிய பேருந்து நிலையம் பகுதியில், போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது, முகக் கவசம் இன்றி மூதாட்டி ஒருவர் கடைக்கு வந்தார். அவரை, அழைத்த போலீசார், அன்போடு முகக் கவசம் அணிவித்தனர். இந்தக் காட்சி பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.