சென்னை மனநல காப்பகத்தில் மேலும் 13 பேருக்கு தொற்று - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39ஆக உயர்வு

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மேலும் 13 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு 39ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-07-22 06:58 GMT
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் மனநல காப்பக நோயாளிகள் உள்பட ஆயிரத்து 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட பரிசோதனை முடிவில் 12 பேருக்கும் 2ஆம் கட்ட  பரிசோதனையில் ஒருவர் என மொத்தம் 13 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். மீதமுள்ளவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் தற்போது வரை 39 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 22 பேர் குணமடைந்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்