நடிகர் விஷால் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் மீதான புகார் - பண மோசடி உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

நடிகர் விஷால் அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றிய பெண் மீது பண மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-08 08:49 GMT
நடிகர் விஷாலின் அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரிந்த ரம்யா என்ற பெண், வருமானவரித்துறைக்கு கட்ட வேண்டிய பணத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சிறிது சிறிதாக கையாடல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதுவரை சுமார் 45 லட்சம் வரை மோசடி செய்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷாலின் மேலாளரான ஹரிகிருஷ்ணன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்திருந்தார். இதனிடையே இந்த புகார் மனுவில் முகாந்திரம் இருப்பதாக கூறி ரம்யா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நம்பிக்கை மோசடி, அசல் ஆவணங்களை மோசடிக்கு பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்