போலீசார் தாக்கியதால் தற்கொலை செய்து கொண்ட கணேசமூர்த்தி - உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜூ
தி.மு.க. ஆட்சியில் காவல் நிலையத்திலேயே மரணம் நிகழ்ந்திருப்பதாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் காவல் நிலையத்திலேயே மரணம் நிகழ்ந்திருப்பதாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார். கோவில்பட்டி அருகே எட்டையபுரத்தில் காவலர்கள் தாக்கியதால் தற்கொலை செய்து கொண்ட கணேசமூர்த்தியின் வீட்டுக்கு சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், லாக்-அப் மரணம் எனக் கனிமொழி குற்றச்சாட்டுவது அரசியல் என்றார்.