கோவையில் தனியார் நிறுவனத்திற்கு சீல் - அனுமதியின்றி வேலைக்கு நேர்முக தேர்வு என புகார்
கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள எம்.இந்தியா டெவலப்பர்ஸ் என்ற தனியார் வீட்டு மனை விற்பனை செய்யும் நிறுவனம், விதிகளை மீறி அதிக அளவிலான ஊழியர்களை கொண்டு இயங்குவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது.
கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள எம்.இந்தியா டெவலப்பர்ஸ் என்ற தனியார் வீட்டு மனை விற்பனை செய்யும் நிறுவனம், விதிகளை மீறி அதிக அளவிலான ஊழியர்களை கொண்டு இயங்குவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கோவை வடக்கு வட்டாட்சியர் மகேஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அரசின் எந்தவித அனுமதியும் பெறாமல் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 120 நபர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தியது தெரியவந்தது. மேலும், சமூக இடைவெளியின்றி முக கவசம் அணியாமல் அங்கிருந்தவர் இருந்த நிலையில், அந்த நிறுவனத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்து சென்றுள்ளனர்.