கடலூரில் 4 வயது சிறுமி உட்பட 5 பேருக்கு கொரோனா
சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகரில் சென்னையில் இருந்து திரும்பிய 4 வயது பெண் குழந்தை மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகரில் சென்னையில் இருந்து திரும்பிய 4 வயது பெண் குழந்தை மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே பகுதியில் 55 வயது பெண் ஒருவருக்கும், எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்