கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி - நெல்லையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு
நெல்லையில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெல்லையில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் நெல்லையில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. நெல்லை மாநகர் பகுதிக்கு உட்பட்ட டவுண் கோடீஸ்வரன் நகர் பகுதியில் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக 64 வயது நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், கொரோனா இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்